Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி

புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டியானது, கடந்த 27-07-2024ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் தவத்திரு . வேலன் ஸ்வாமிகள் (முதல்வர் , சிவகுரு ஆதீனம்) அவர்களின் ஆசியுரையுடனும் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் (அதிபர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை) அவர்களின் வாழ்த்துரையுடனும் காலை 9 மணியளவில் ஆரம்பித்த இப்போட்டி நிகழ்ச்சியானது பிற்பகல் 5.30 வரை தொடர்ச்சியாக நடை பெற்றது.

இப் போட்டி நிகழ்வை சாவிகா சங்கீத அறிவாலய உப தலைவர் செல்வி.கஜந்தினி பாலேந்திரராஜா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்ததோடு முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் (முதலாவது பீடாதிபி,யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி),திரு.யோகானந்தம் ஜெகானந்தம் (அதிபர்,ஆனைப்பந்தி மெ.மி.த.க பாடசாலை), செல்வி.திலகவதி துரைச்சாமி (இயக்குநர் ,புதிய வாழ்வு நிறுவனம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர் .

இந் நிகழ்வில் 70ற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர், நடுவர்களாக பிரபல இசைக்கலைஞர்கள் திருமதி. வாசஸ்பதி ரஜீந்திரன், திருமதி. விக்கினேஸ்வரி நரேந்திரா, திரு. நவரட்ணம் பரந்தாமன், திரு. ரஜீந்திரன் சுரசாகித்தியன், திரு. இராசரத்தினம் நிரோஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இப் போட்டியானது வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியக் கருவி இசைத்தல் போன்ற பிரிவுகளில் இடம்பெற்றதோடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கி நிகழ்த்தப்பட்ட இசைப்போட்டி என்பது குறிப்பிடதக்கது.

மாற்றுத்திறனாகளின் இசைத் திறமையினை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், சமூகத்தில் அவர்களின் ஆற்றல்கள் வெளிக்கொணரவேண்டும் , அவர்களிற்கான அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி நிகழ்வானது நடாத்தப்பட்டது.

20 இற்கு மேற்பட்ட இளம் தன்னார்வலர்களின் அணிசேர்முயற்சியால் நிகழ்ந்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்காக இரவுபகலாக உழைத்த சாவிகா சங்கீத அறிவாலயத்தின் நிறுவுனர் செல்வி. சாகிஸ்னா ரவிச்சந்திரன், புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையின் தலைவர் திருமதி. நந்தகோபன் சுகந்தினி, புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.வி.சு. விஜயலாதன் மற்றும் சாவிகா அறிவாலயத்துடன் இணைந்து இயங்கும் அனைத்து இளம் தொண்டர்களுக்கும் இதயபூர்வ நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம் 🙏

Comments are closed.