தேயிலை தோட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்பு
புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வியை முதன்மைப்படுத்தும் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், மலையகத்தின் மன்றாசி தேயிலை தோட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு தேவையான தளபாடங்களும் , மற்றும் லோவர் கிறன்லி முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான பாடப்பயிற்சி புத்தகங்களும், மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன எமது நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.
கல்விக்கான சேவையின் ஊடாக சமூக மாற்றத்தினை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கான நிதியினை செல்வன். தபீசன் பாலா அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு எமது நிறுவனத்திற்கு வழங்கிய அன்பளிப்பில் இருந்தே, இத்திட்டம் பூர்த்திசெய்யப்பட்டது.
செல்வன். தபீசனை வாழ்த்துவதோடு, எம்மைதொடர்புகொண்டு இத்திட்டத்திற்கு தாமாகவே முன்வந்து நிதிஉதவிசெய்த திருமதி வனஜா பாலா அவர்களிற்கு மனமார்ந்த நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
