மாற்றுத்திறனாளி முயற்சியாளனுக்கு மீன் பிடிப்பதற்குத்தேவையான உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் மக்கள் பாவனைக்கு விடப்பட்ட காங்கேசன்துறையின் ஒரு பகுதியான ஊறணி எனும் கிராமத்தில் வாழும் மாற்றுத்திறனாளியான திரு.பிள்ளையான் மகேஸ்வரன் என்கின்ற முயற்சியாளனுக்கு மீன் பிடிப்பதற்குத்தேவையான உபகரணங்களைக்கொள்வனவு செய்வதற்காக 1,90,000/- வழங்கப்பட்டது.
அவரிற்கு நன்கு தெரிந்த தொழிலில் அவரை மேலும் முன்னேற்றுவதற்காக, எமது திட்ட இணைப்பாளர் திரு. வி.விஜயலாதன் அவர்களால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் தேவை அறிந்து உதவ முன்வந்த கனடா நிறுவனமான ஏழுஅறக்கட்டளை நிறுவனத்திற்கும், ஏற்பாட்டாளர் திரு ரவி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.



Previous Post
Next Post
