295 மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதிச்செலவில் அப்பியாச கொப்பிகள்
புதிய வாழ்வு நிறுவனத்தின் ஊடாக கணநாதம் அறக்கட்டளையினதும் மற்றும் அதன் நலன்விரும்பிகளின் நிதி அனுசரணையிலும் புதிய வாழ்வு நிறுவனத்தின் மலையக கல்வி அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாக வறுமை நிலையில்உள்ள மாணவர்களை கல்வி உதவிகளின் மூலம் வலுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் நு.பாரதி தமிழ் வித்தியாலம், நு. பிரஸ்டன் தமிழ் வித்தியாலயம், டொரிங்டன் தமிழ் வித்தியாலயம், ஆட்லோ தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 250 மாணவர்களுக்கும் மற்றும் சமூகத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 45 மாணவர்களுக்குமாக மொத்தமாக 295 மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதிச்செலவில் அப்பியாச கொப்பிகள் உள்ளடங்கிய கல்வி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது,
இத்திட்டத்தை முன்நின்று செயல்படுத்திய மாணவப்பிரதிநிதிகளான திரு. அழகுராஜா, திரு. சரத்குமார் ஆகியோருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, ஒரு மில்லியன் ரூபாவை எமக்கு வழங்கிய கணநாதம் அமைப்பின் இயக்குனர் திரு. நிறைஞ்சனிற்கும், அவரின் நண்பர்களுக்கும் இதயபூர்வ நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
