ஐந்து பெண்களின் கூட்டு முயற்சில் வர்த்தக நிலையம் உருவாக்கம்!!
மதிப்பிற்குரிய திரு. ஜயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் நிதிப்பங்களிப்பில், புதுக்குடியிருப்பைச்சேர்ந்த திருமதி. சித்திராவின் தலைமையில், மொத்தம் ஐந்து பெண்களுக்கு பற்றிக்வேலை செய்வதற்காக, தலா ஒரு இலட்ச ரூபாவீதம் வழங்கப்பட்டது.
அவர்களின் ஒன்றிணைந்த கூட்டு முயற்சியானது, இன்று சுயமாக ஒரு வர்த்தகநிலையத்தை உருவாக்குமளவிற்கு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல முயற்சியுடன் கூடிய ஒற்றுமையானது, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், இதுவே எமது இனத்திற்கு இப்போது தேவையானதும் கூட 🙏
தொடர்ந்து எமது நிறுவனத்திற்கு உதவி புரியும் மதிப்பிற்குரிய திரு. சிவசாமி பிறேம் அவர்களிற்கு பயனாளிகள் சார்ந்தும், நிறுவனம் சார்ந்தும் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏

Previous Post
Next Post
