ஒரு சிறந்த முயற்சியாளனுக்கு சக்கர நாற்காலி வழங்கிவைப்பு!!
மன்னார் மாவட்டத்தில் தோட்டவெளி எனும் கிராமத்தில் வசிக்கும், திரு.ஜெயக்குமார் என்பவர் ஒரு சிறந்த முயற்சியாளன், எமது மன்னார் மாவட்ட மாணவப்பிரதிநிதிகள் மூலம் அவர் தனது வேண்டுகோழான சக்கரநாற்காலி ஒன்றை கேட்டிருந்தார், அவரது வலிகள் நிறைந்த வாழ்க்கைக்கு எம்மால் ஆன உதவியான சக்கர நாற்காலியும், அவரிடம் பழுதடைந்த நிலையில் இருந்த மோட்டார்வாகனத்தை திருத்துவதற்கான நிதியையும் புதிய வாழ்வு நிறுவனம் வழங்கியிருந்தது.
இத்திட்டத்திற்கான நிதியை கனடாவில் இருந்து எமக்கு அனுப்பிவைத்த திருமதி. கௌரி பாலா அவர்களுக்கு மாணவப்பிரதிநிதிகள் சார்பிலும், முயற்சியாளன் சார்பிலும், எமது நிறுவனத்தின் சார்பிலும் நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்🙏

Previous Post
Next Post
