ஒரு வருசம் ஒரு வீடு என்ற திட்டத்தின்கீழ் வீடு கையளிக்கப்பட்டது!!
மட்டக்களப்பு கோமத்தலாமடு எனும் கிராமத்தில், பலசிரமங்களின் மத்தியில் பிள்ளை, பேரப்பிள்ளைகளுடன் ஓலைக்குடிசையில் வாழ்ந்து வந்த திருமதி. கணபதிப்பிள்ளை மங்கையர்கரசி என்பவரிற்கு , எமது நிறுவனத்தின் ஒரு வருசம் ஒரு வீடு என்ற திட்டத்தின்கீழ் , 50/50 என்றும் நண்பர்கள் குழுவினரின் நிதிப்பங்களிப்பில் , எமது மட்டக்களப்பு மாணவப்பிரதிநியான திரு. பரஸ்காந்த் தலைமையில் வெற்றிகரமாக திட்டம் பூர்த்திசெய்யப்பட்டு வீடு கையளிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்த என்றும் நண்பர்கள் 50/50 குழுவினரான ரமேஷ், ரமணன், பிரபாகரன், அன்டனி, நாதன், குமார், கோபிரஞ்சன் ஆகியோருக்கு நிறுவனத்தின் சார்பிலும் மாணவப் பிரதிநிதிகள் சார்பிலும், பயனாளிகள் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெருவிப்பதோடு, மிகத்திறம்பட குறுகியகாலத்தில் வெற்றிகரமாக வேலைத்திட்டத்தை அர்ப்பணிப்போடு செய்துமுடித்த பரஸ்காந்திற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்👏👏👏👏👏🙏





Previous Post
Next Post
