விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கல் !
30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து மக்கள் பாவனைக்காக விடப்பட்ட போதிலும் இன்றுவரை, பலகேள்விகளோடு போராடிவரும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், பொன்விளையும் பூமியை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கிலும், விவசாயத்தில் ஈடுபடுவோரை அணுகி ஊக்குவிப்புத்தொகையை இரண்டு கட்டமாக வழங்கி வைத்திருந்தோம்.
நல்ல விளைச்சலைப்பெற்ற விவசாயிகள் தமது அன்பையும், நன்றியையும் தெரிவித்ததோடு, அடுத்த கட்டமாக விவசாயத்தை விரிவு படுத்துவது தொடர்பாகவும், மேலதிகமாக அங்கத்தவர்களை இணைப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக சிறப்காகச்செயல்படும், ஜெயம் அண்ணா, பார்த்தீபன்தம்பியின் தோட்டத்தில் விளைந்த விளைச்சலை எமது உறவுகளோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம், இந்தப்பதிவை பார்வையிடும் உறவுகள் விவசாயிகளை ஊக்குவிக்குமுகமாகவும், ஏனையோரையும் உற்சாகப்படுத்தி பாவனையற்றிருக்கும் , விவசாய மண்ணைப்பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் பாடுபடுவோம், ஒன்றுபடுவோம் என உரிமையோடு கேட்டு நிற்கின்றோம் .





Previous Post
